ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களுக்கு அதிகாரப்பூர்வ அடையாள அட்டைகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர் தினத்தை முன்னிட்டு கல்வி அமைச்சில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற நிகழ்வின் போது அமைச்சர் தினேஸ் குணவர்தன இதனை தெரிவித்துள்ளார்.
இதுவரையில் கல்வி அமைச்சின் ஊடாக ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களுக்கு அதிகாரப்பூர்வ அடையாள அட்டையை வழங்கப்படவில்லை எனவும் முதன் முறையாக இவ்வாறு அதிகாரப்பூர்வ அடையாள அட்டைகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்
Comments
Post a Comment