Skip to main content

20 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மூன்றாம் கட்டமாக பைசர் தடுப்பூசிகளை வழங்க தீர்மானம்

 


நாட்டில் 20 வயதுக்கு மேற்பட்ட சகலருக்கும் மூன்றாம் கட்டமாக பைசர் தடுப்பூசி வழங்கப்படும். இதன் போது நாட்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் மற்றும் சுகாதார ஊழியர்களுக்கு முன்னுரிமையளிக்கப்படும் என்று இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமண தெரிவித்தார்.


இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் ,

உயர்தர மாணவர்களுக்கு வழங்குவதற்கு தேவையான ஒரு தொகை பைசர் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. அதே வேளை எதிர்வரும் 3 வாரங்களுக்குள் மேலும் 10 இலட்சம் பைசர் தடுப்பூசிகள் கிடைக்கப் பெறவுள்ளன. இது தவிர மேலும் 17 இலட்சம் பைசர் தடுப்பூசிகள் எதிர்வரும் நவம்பர் மாதத்தில் கிடைக்கப் பெறும்.

தேசிய மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்திற்கும் பைசர் தயாரிப்பு நிறுவனத்திற்குமிடையில் எட்டப்பட்ட உடன்பாட்டுக்கமைய மேலும் 14.5 மில்லியன் பைசர் தடுப்பூசிகளைப் பெற்றுக் கொள்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த தடுப்பூசி தொகையானது நாட்டிலுள்ள 20 வயதுக்கு மேற்பட்ட சகலருக்கும் செயலூட்டியாக வழங்குவதற்கு பயன்படுத்தப்படவுள்ளது என்று தெரிவித்தார்

Comments