லொஹான் ரத்வத்தையுடன் தூக்கு மேடையைப் பார்க்க நான் செல்லவில்லை. அன்றைய தினம் மாத்தறையில் இருந்தேன். கைகோர்த்துச் செல்லும் பெண்ணல்ல நான் என புஷ்பிகா தெரிவித்துள்ளார்.
இலங்கையின் திருமதி அழகு ராணி புஷ்பிகா டி சில்வா, அமைச்சர் லொஹான் ரத்வத்தையுடன் வெலிக்கடை சிறைச்சாலையில் தூக்கு மேடையைப் பார்க்கச் சென்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை மறுத்துள்ளார்.
சம்பவத்தன்று தான் கொழும்பில் இல்லை என்றும், தான் மாத்தறையில் இருந்ததாகவும், அதிவேக நெடுஞ்சாலை யில் உள்ள கமெரா காட்சிகளைச் சரி பார்த்தால் அதை உறுதிப்படுத்த முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.
எனக்கு ஏற்பட்ட பிரச்சினை மூலமாகப் பொறுப்பு வாய்ந்த ஊடகம் தவறாக செய்திகளைச் சமுகத்துக்குப் பரப்புகிறது என்பது எனக்குத் தெரியவந்தது.
கே. அமைச்சர் லொஹான் ரத்வத்தையுடன் வெலிக்கடை மற்றும் அநுராதபுர சிறைசாலையில் உள்ள தூக்கு மேடையைப் பார்க்கச் சென்றீர்களா?
ப.நான் செல்லவில்லை
கே.நெருப்பில்லாமல் புகை வராது. நீங்கள் சொல்வதை நான் எவ்வாறு ஏற்றுக்கொள்வது ?
ப. புஷ்பிகா என்ற நான் பிழை செய்தால் பிழை என்றும் சரியாகச் செய்தால் சரி என்றும் ஏற்றுக் கொள்ளும் சக்தி என்னிடம் உள்ளது.
நான் செய்யாத தவறை ஏற்றுக்கொள்ள முடியாது.
கடந்த 12, 13 ஆகிய இரண்டு தினங்களும் என்ன செய்தேன் என எனது மனச்சாட்சிக்குத் தெரியும்.
இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தையுடன் வெலிக்கடை சிறைச்சாலையில் உள்ள தூக்கு மேடையை நான் பார்க்கச் சென்றதாக வெளியான தகவல் உண்மைக்குப் புறம்பானது.
தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Comments
Post a Comment