Skip to main content

வெளிநாடுகளிலிருந்து வருபவர்களால் ஆபத்து – உபுல் ரோஹண அதிருப்தி

 


வெளிநாடுகளிலிருந்து வருபவர்கள் சமூகமயமாகுவது மிகவும் ஆபத்தானதாகும். இவ்வாறு இருக்கையில் அவ்வாறு வருகை தருபவர்கள் தொடர்பில் எந்த தகவலும் சுகாதார பிரிவினருக்கு பெற்றுகொடுக்காமை தொடர்பில் அதிருப்தியடைந்துள்ளதாக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவா் உபுல் ரோஹண

தெரிவித்துள்ளாா்.

இதுதொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளாா். இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

தற்போது வெளிநாடுகளிலுள்ள தொழிலாளர்கள் மற்றும் சுற்றுலாபயணிகள் நாட்டுக்கு வருகை தந்துகொண்டே இருக்கிறாா்கள். வெளிநாடுகளிலுள்ள தொழிலாளா்கள் மற்றும் சுற்றுலாபயணிகளை நாட்டுக்கு அழைத்து வருவது தொடர்பில் எந்த ஆட்சேபனையும் இல்லை.வெளிநாட்டிலிருக்கும் தொழிலாளா்களும் மீண்டும் நாட்டுக்கு திரும்பி வரவே நீண்ட காலமாக காத்திருக்கிறாா்கள். அவர்களை நாட்டுக்கு அழைத்து வருவது சிறந்த வேலைத்திட்டமாகும்.

அதுமாத்திரமல்லாமல் சுற்றுலா பயணிகளும் நாட்டுக்கு வருகை தந்துகொண்டே இருக்கிறாா்கள். இருந்தபோதிலும் இந்த குழுவினா் நாட்டுக்கு நுழையும் போதும் அதன் பின்னரும் இடம்பெறும் செயற்பாடுகள் தொடர்பில் எங்களுக்கு எவ்வித தெளிவும் இல்லாத நிலையே இருக்கிறது.

ஒருவர் கடந்த காலங்களில் இருந்த நாடுகளில் கொரோனா தடுப்பூசி பெற்றுகொண்டிருந்தால் பி.சி.ஆர். பரிசோதனையின்றி அவர்களை நாட்டுக்குள் அனுமதிப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். அவ்வாறு அனுமதிக்கப்படுபவர்கள் தொடர்பில் பின் விபரங்களை பெற்றுகொள்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அதனால் வெளிநாடுகளிலிருந்து வருபவர்கள் எங்கு

செய்லிகறார்கள், எந்த உந்த பிரதேசங்களுக்குச் செல்கிறா்ாகள் என்ற விபரத்தை பெற்றுகொள்ள முடியாத நிலை
ஏற்பட்டுள்ளது. வெளிநாட்டு முதலீடு எமக்கு எவ்வளவு அவசியமோ, அதேபோன்று மக்களின் சுகாதார பாதுகாப்பும் எமக்கு அவசியமாகும். காரணம் அவர்கள் சமூகமயப்படுதல் மிகவும் ஆபத்தான நிலைமையாகும்.

அதனால், வெிளநாடுகளிலிருந்து வருபவர்கள் தொடர்பிர் சரியான தகவல்களை சுகாதார அதிகாரிகளுக்கு பெற்றுக்கொடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆகவே வெளிநாடுகளிலிருந்து வருகை தருபவர்கள் தொடர்பில் சரியான தகவல்களை திரட்ட வேண்டியதே சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் பிரதாக பொறுப்பாகும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளாா்.

Comments

Popular posts from this blog

எரிபொருள் தாங்கி வெடித்ததில் 91 பேர் உயிரிழப்பு!

  சியரா லியோன் தலைநகர் ப்ரீடவுனில் எரிபொருள் தாங்கியொன்று லொறியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் குறைந்தது 91 பேர் உயிரிழந்துள்ளனர். எரிபொருள் கொள்கலன் தீப்பற்றுவதற்கு முன்னர், அதிலிருந்த எரிபொருள் கசிந்தமையால் பரபரப்பான குறித்த வீதியில் பயணித்த வாகனங்கள் தீப்பற்றியுள்ளன. கொள்கலனிலிருந்து எரிபொருள் கசிந்ததை தொடர்ந்து அதனை சேகரிப்பதற்காக சாரதிகள் முற்பட்ட வேளையில், வாகன நெரிசல் ஏற்பட்டதாகவும் இதன்போதே திடீரென தீப்பற்றியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. விபத்து குறித்த செய்திகளை வெளியிட்டுள்ள உள்ளூர் ஊடகங்கள், விபத்துக்குள்ளான வாகனங்களை சுற்றி சடலங்கள் காணப்படுவதாக சுட்டிக்காட்டியுள்ளன. விபத்து குறித்து தமது கவலையை வெளியிட்டுள்ள ஜனாதிபதி ஜூலியஸ் மடா பயோ, பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கான அனைத்து ஒத்துழைப்புகளையும் வழங்குவதாக உறுதியளித்துள்ளார்.

கொரோனா மரணத்தை தடுக்கும் மாத்திரை கண்டுபிடிப்பு!

  கொரோனா சிகிச்சைக்காக தாங்கள் உருவாக்கியுள்ள மாத்திரை, அந்த நோயால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அபாயத்தையும் உயிரிழப்பு அபாயத்தையும் 90 சதவீதம் வரை குறைக்கும் என்று அமெரிக்காவின் ஃபைஸா் நிறுவனம் தெரிவித்துள்ளது. இது குறித்து, நிறுவனம் வெளியிட்டுள்ள அந்த மருந்தின் ஆய்வு முடிவுகள் தெரிவிப்பதாவது: எங்களின் கொரோனா சிகிச்சை மாத்திரை 775 பெரியவா்களுக்குக் கொடுத்து சோதித்துப் பாா்க்கப்பட்டது. ஆய்வில் பங்கேற்ற அனைவரும், அதற்கு முன்னா் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவா்கள் ஆவா். அந்த ஆய்வின்போது, எங்களின் கொரோனா சிகிச்சை மாத்திரையுடன் மற்றொரு தீநுண்மி எதிா்ப்பு மருந்தும் பங்கேற்பாளா்களுக்கு அளிக்கப்பட்டது. அதில், கொரோனா சிகிச்சை மாத்திரை பெற்றுக் கொண்ட குழுவினருக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டிய அளவுக்கு நோய் தீவிரமடையும் அபாயம் 89 சதவீதம் குறைந்தது தெரிய வந்தது. மேலும், அந்தக் குழுவில் யாரும் ககொரோனாவுக்கு பலியாகவில்லை. சிகிச்சை மாத்திரை அளிக்கப்பட்டவா்களில் 1 சதவீதத்துக்கும் குறைவானவா்களே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். அதே நேரம், எங்களின் கொரோனா மாத்திரையைப் பயன்படுத...

இரண்டு மாதங்களில் கொரோனா வைரஸின் மற்றொரு அலை – மருத்துவ அதிகாரிகள் சங்கம்

  அடுத்த இரண்டு மாதங்களில் மேலும் ஒரு கொரோனா தொற்று அலைக்கு நாடு முகம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும் என அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அரச நிறுவனங்களிலும் சுகாதார நடைமுறைகள் புறக்கணிக்கப்படுவதை அவதானிக்க முடிந்துள்ளதாக அச்சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் வைத்தியர் ருவன் ஜயசூரிய தெரிவித்தார். பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட பின்னர் கொரோனா தொற்று முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட நிலையில் போராட்டங்கள் மற்றும் அதிகளவில் மக்களின் ஒன்றுகூடல்களை அவதானிக்க முடிந்துள்ளது என்றும் குறிப்பிட்டார். இந்நிலைமை காரணமாக எதிர்வரும் காலங்களில் இலங்கையானது கொரோனா வைரஸின் மற்றுமொரு அலையை எதிர்கொள்ளக்கூடும் என்றும் வைத்தியர் ருவன் ஜயசூரிய கூறினார். எவ்வாறாயினும், இலங்கையின் 60% க்கும் அதிகமானவர்கள் தடுப்பூசியை செலுத்திக் கொண்டுள்ளமையினால் வைரஸிலிருந்து பாதுகாப்பாக இருக்க முடியும் என நம்புவதாகவும் அவர் தெரிவித்தார். இருப்பினும் வைரஸின் புதிய மாறுபாடுகள் உருவாகி வருவதாகக் கூறிய வைத்தியர் ருவன் ஜயசூரிய, பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு கேட்டுக்கொண்டார்