செல்வச்சந்நிதி ஆலயத்திற்கு அருகிலுள்ள தொண்டமானாறு நீரேரியில், சடலம் ஒன்று மிதப்பதாக அச்சுவேலி பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
குறித்த தகவலுக்கமைய சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார், சடலத்தை கண்டெடுத்துள்ளனர்.
இவ்வாறு சடலமாக கண்டெடுக்கப்பட்டவர் முதியவர் எனவும் அவர் தொடர்பிலான தகவல்களை அறிய மேலதிக விசாரணையை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Comments
Post a Comment