குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு வருமாறு அழைத்து என்னை வேட்டையாட முயற்சிக்கிறார்கள்- மனுஷ நாணயக்கார
பாராளுமன்ற உறுப்பினர்கள் நாட்டில் காணப்படும் பிரச்சினை கள் குறித்து பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்புவதை தடுத்து நிறுத்தும் நோக்கில் அவர்கள் வேட்டையாடப்படுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் காலி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற நடவடிக்கைகளுக்கு நேரடியான பங்களிப்பை வழங்கும் சந்தர்ப்பத்தை தடுக்க எக் காரணமும் கூறாது தன்னை குற்றவியல் விசாரணை திணைக்களத்துக்கு அழைத்துள்ளமை நியாயமான சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
குற்றவியல் விசாரணைத் திணைக்களத்தின் கணினி தடயவியல் பிரிவு மேற்கொண்டு வரும் விசாரணை சம்பந்தமான தகவல்களைப் பெற்றுக்கொள்ள டிஜிட்டல் தடயவியல் ஆய்வுக் கூடத்தின் பொறுப்பதிகாரியை சந்திப்பதற்காக குற்றவியல் விசாரணைத் திணைக் களத்தில் ஆஜராகுமாறு நாரஹேன்பிட்டி பொலிஸ் நிலையம் ஊடாக எனக்கு அழைப்பு கிடைத்தது.
யார் செய்த முறைப்பாட்டுக்கு அமைய, எந்தக் காரணத்திற்காக விசாரணைக்கான தகவல்களை என்னிடம் பெற எதிர்பார்க்கின்றனர் என்பது குறித்துக் கூறவில்லை.
எவ்வித காரணங்களும் கூறாது குற்றவியல் விசாரணை திணைக் களத்திற்கு அழைத்தமை சிவில் பிரஜை என்ற வகையில் எனது உரிமைகளை மீறும் நடவடிக்கை என்பதுடன் பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் எனது சிறப்புரிமையை மீறும் செயல். அத்துடன் இந்த விதமாக எவ்வித காரணமும் அறிவிக்காது குற்றவியல் விசாரணை திணைக்களத்தில் ஆஜராகுமாறு அறி வித்துள்ளவையானது நாட்டில் அமுலில் இருக்கும் பொதுச் சட்டத்தை மீறிச் செல்லும் நடவடிக்கை எனவும் மனுஷ நாணயக்கார குறிப்பிட்டுள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர்கள் நாட்டில் காணப்படும் பிரச் சினைகள் குறித்து பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்புவதைத் தடுத்து நிறுத்தும் நோக்கில் அவர்கள் வேட்டையாடப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Comments
Post a Comment