கெஸ்பேவ பகுதியில் வைத்து இராணுவ உயர் அதிகாரி ஒருவர் 23 வயது இளைஞனை சரமாரியாக தாக்கியுள்ளார்.
இராணுவ அதிகாரியின் வாகனத்தை, குறித்த இளைஞன் மோட்டார் சைக்கிளில் முந்திச்செல்ல முற்பட்ட போது, தடுத்து நிறுத்தி இவ்வாறு தாக்குதலை மேற்கொண்டதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறு இராணுவ உயர் அதிகாரி ஒருவர் அநாகரீகமாக நடந்துக்கொண்டதை பல்வேறு தரப்பினரும் கடுமையாக கண்டித்துள்ளனர்.
இந்த சம்பவத்தின் போது பதிவான காணொளியொன்று தற்போது வெளியாகியுள்ளது

Comments
Post a Comment