யாழ்ப்பாணம் – கோண்டாவிலில் மதுபோதையில் குடும்பஸ்தர் ஒருவர் பொலிஸாரை கத்தியால் குத்த முற்பட்டதையடுத்து பொலிஸார் தமது பாதுகாப்புக்காக கைத் துப்பாக்கியால் வெடி வெடித்ததால் அப்பகுதியில் பரபரப்பு நிலவிவருகிறது.
இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோண்டாவில் செபஸ்தியார் ஆலயத்துக்கு அண்மையில் ஒருவர் மது அருந்திவிட்டு குடும்பத்தினருடன் முரண்படுள்ளார். இது தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் கிடைக்கப் பெற்றதையடுத்து அவ்விடத்துக்கு கோப்பாய் பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் சென்றுள்ளனர்.
இதன் போது குறித்த நபர் பொலிசாருடன் முரண்பட்டதோடு போலீசாரையும் கத்தியால் குத்த முற்பட்டுள்ளார் . இதன் போது பொலிஸார் தமது பாதுகாப்புக்காக தாம் வைத்திருந்த கைத்துப்பாக்கியால் வெடி வெடித்துள்ளனர். இதனால் குறித்த நபர் தப்பியோட முயற்சி செய்துள்ளார்.
எனினும் குழப்பம் விளைவித்த நபர் கைது செய்யப்பட்டு கோப்பாய் பொலிஸ் நிலையம் அழைத்து செல்லப்பட்டுள்ளார்.

Comments
Post a Comment