மாத்தறை, கந்தர பிரதேசத்தில் தன்னை கைது செய்ய முயன்ற பொலிஸ் அதிகாரிகள் இருவரின் கையை கடித்த நபருக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த நபரை எதிர்வரும் 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மாத்தறை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
அத்துடன், காயமடைந்த பொலிஸ் அதிகாரிகள் இருவரும் தலல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
கொலை வழக்கொன்றின் சாட்சியாளர் ஒருவருக்குக் கொலை மிரட்டல் விடுக்கப்படுவதாக கடந்த 25 ஆம் திகதி கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கமைய, குறித்த சாட்சியாளரின் வீட்டிற்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
பொலிஸ் பாதுகாப்பு வழங்கும் சந்தர்ப்பத்தில் அவ்விடத்திற்கு சந்தேகநபர் வாளுடன் வருகைத் தந்துள்ளதுடன், அவரை கைது செய்வதற்கு முயற்சித்தபோதே பொலிஸ் அதிகாரிகளின் கையை கடித்து அவர் தப்பிக்க முயன்றுள்ளார்.
இதனையடுத்து. பொலிஸ் அதிகாரிகள் அவரை மடக்கிப்பிடித்து கைதுசெய்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

Comments
Post a Comment