Skip to main content

7 கண்டங்களை பைக்கிலே சுற்றிய பெண்ணை சந்தித்த அஜித்குமார்.. கோட் சூட்டுடன் கம்பீரமான புகைப்படம்.


 பொதுவாக சினிமாவைப் பொறுத்தவரை நடிகர் மற்றும் நடிகைகள் படங்களில் நடிப்பதோடு மட்டுமல்லாமல், படங்களை தயாரிப்பது, இயக்குவது மற்றும் இதர பணிகளில் தங்கள் கவனத்தை செலுத்தி வருகின்றனர். ஆனால் இவர்களுக்கு மாறாக நடிகர் அஜித் தனக்கு கிடைக்கும் ஓய்வு நேரங்களில் பைக் ரேசில் ஈடுபடுவது, துப்பாக்கி சுடுதல் போட்டியில் பங்கேற்பது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வருகிறார்.

வருமானம் ஈட்டும் பணிகளை விடுத்து தனக்கு பிடித்த போட்டிகளில் கவனம் செலுத்தி வரும் நடிகர் அஜித்தின் செயலை பலரும் பாராட்டி வருகின்றனர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் அஜித், கடந்த மார்ச் மாதம் சென்னையில் நடைபெற்ற 46வது தமிழ்நாடு மாநில துப்பாக்கி சுடுதல் போட்டியில் கலந்து கொண்டு 6 பதக்கங்களை வென்று அசத்தினார்.

மாநில அளவிலான போட்டியில் வெற்றி பெற்ற அஜித், தற்போது தேசிய அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டியில் பங்கேற்க உள்ளார். இப்போட்டி விரைவில் டெல்லியில் தொடங்க உள்ளது. இதற்காக சமீபத்தில் டெல்லி சென்ற நடிகர் அஜித், அங்கு தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

பயிற்சிக்கிடையே கிடைத்த ஓய்வு நேரத்தில் தஜ்மஹாலை சுற்றி பார்க்க சென்ற நடிகர் அஜித் ரசிகர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. பலரும் அஜித்தை தேடி வந்து புகைப்படம் எடுத்துள்ள நிலையில், அஜித் ஒருவரை சந்தித்து புகைப்படம் எடுத்துள்ளார் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?

தனி ஒரு பெண்ணாக மோட்டார் சைக்கிளில் 7 கண்டங்கள் மற்றும் 64 நாடுகளை சுற்றி வந்த மாரல் என்ற பெண்மணியை தான் நடிகர் அஜித் நேரில் சந்தித்து பேசியுள்ளார். டெல்லியில் இவர்கள் இருவரும் சந்தித்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. மேலும் மாரலிடம் நடிகர் அஜித் அவரது அனுபவம் மற்றும் கருத்துக்களை கேட்டறிந்ததாக தெரிகிறது. எனவே ஒருவேளை வரும்காலத்தில் அஜித்தும் இவரை போல் மோட்டார் சைக்கிளில் உலகை வலம் வந்தாலும் வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Comments

Popular posts from this blog

எரிபொருள் தாங்கி வெடித்ததில் 91 பேர் உயிரிழப்பு!

  சியரா லியோன் தலைநகர் ப்ரீடவுனில் எரிபொருள் தாங்கியொன்று லொறியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் குறைந்தது 91 பேர் உயிரிழந்துள்ளனர். எரிபொருள் கொள்கலன் தீப்பற்றுவதற்கு முன்னர், அதிலிருந்த எரிபொருள் கசிந்தமையால் பரபரப்பான குறித்த வீதியில் பயணித்த வாகனங்கள் தீப்பற்றியுள்ளன. கொள்கலனிலிருந்து எரிபொருள் கசிந்ததை தொடர்ந்து அதனை சேகரிப்பதற்காக சாரதிகள் முற்பட்ட வேளையில், வாகன நெரிசல் ஏற்பட்டதாகவும் இதன்போதே திடீரென தீப்பற்றியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. விபத்து குறித்த செய்திகளை வெளியிட்டுள்ள உள்ளூர் ஊடகங்கள், விபத்துக்குள்ளான வாகனங்களை சுற்றி சடலங்கள் காணப்படுவதாக சுட்டிக்காட்டியுள்ளன. விபத்து குறித்து தமது கவலையை வெளியிட்டுள்ள ஜனாதிபதி ஜூலியஸ் மடா பயோ, பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கான அனைத்து ஒத்துழைப்புகளையும் வழங்குவதாக உறுதியளித்துள்ளார்.

கொரோனா மரணத்தை தடுக்கும் மாத்திரை கண்டுபிடிப்பு!

  கொரோனா சிகிச்சைக்காக தாங்கள் உருவாக்கியுள்ள மாத்திரை, அந்த நோயால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அபாயத்தையும் உயிரிழப்பு அபாயத்தையும் 90 சதவீதம் வரை குறைக்கும் என்று அமெரிக்காவின் ஃபைஸா் நிறுவனம் தெரிவித்துள்ளது. இது குறித்து, நிறுவனம் வெளியிட்டுள்ள அந்த மருந்தின் ஆய்வு முடிவுகள் தெரிவிப்பதாவது: எங்களின் கொரோனா சிகிச்சை மாத்திரை 775 பெரியவா்களுக்குக் கொடுத்து சோதித்துப் பாா்க்கப்பட்டது. ஆய்வில் பங்கேற்ற அனைவரும், அதற்கு முன்னா் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவா்கள் ஆவா். அந்த ஆய்வின்போது, எங்களின் கொரோனா சிகிச்சை மாத்திரையுடன் மற்றொரு தீநுண்மி எதிா்ப்பு மருந்தும் பங்கேற்பாளா்களுக்கு அளிக்கப்பட்டது. அதில், கொரோனா சிகிச்சை மாத்திரை பெற்றுக் கொண்ட குழுவினருக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டிய அளவுக்கு நோய் தீவிரமடையும் அபாயம் 89 சதவீதம் குறைந்தது தெரிய வந்தது. மேலும், அந்தக் குழுவில் யாரும் ககொரோனாவுக்கு பலியாகவில்லை. சிகிச்சை மாத்திரை அளிக்கப்பட்டவா்களில் 1 சதவீதத்துக்கும் குறைவானவா்களே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். அதே நேரம், எங்களின் கொரோனா மாத்திரையைப் பயன்படுத...

இரண்டு மாதங்களில் கொரோனா வைரஸின் மற்றொரு அலை – மருத்துவ அதிகாரிகள் சங்கம்

  அடுத்த இரண்டு மாதங்களில் மேலும் ஒரு கொரோனா தொற்று அலைக்கு நாடு முகம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும் என அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அரச நிறுவனங்களிலும் சுகாதார நடைமுறைகள் புறக்கணிக்கப்படுவதை அவதானிக்க முடிந்துள்ளதாக அச்சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் வைத்தியர் ருவன் ஜயசூரிய தெரிவித்தார். பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட பின்னர் கொரோனா தொற்று முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட நிலையில் போராட்டங்கள் மற்றும் அதிகளவில் மக்களின் ஒன்றுகூடல்களை அவதானிக்க முடிந்துள்ளது என்றும் குறிப்பிட்டார். இந்நிலைமை காரணமாக எதிர்வரும் காலங்களில் இலங்கையானது கொரோனா வைரஸின் மற்றுமொரு அலையை எதிர்கொள்ளக்கூடும் என்றும் வைத்தியர் ருவன் ஜயசூரிய கூறினார். எவ்வாறாயினும், இலங்கையின் 60% க்கும் அதிகமானவர்கள் தடுப்பூசியை செலுத்திக் கொண்டுள்ளமையினால் வைரஸிலிருந்து பாதுகாப்பாக இருக்க முடியும் என நம்புவதாகவும் அவர் தெரிவித்தார். இருப்பினும் வைரஸின் புதிய மாறுபாடுகள் உருவாகி வருவதாகக் கூறிய வைத்தியர் ருவன் ஜயசூரிய, பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு கேட்டுக்கொண்டார்