முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன மற்றும் அவரது மனைவியை குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவித்து கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மஹரகமவில் சட்டவிரோதமாக ஒரு நிலத்தை கையகப்படுத்தியமை தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் இருந்தே அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற வழக்கு விசாரணையின்போதே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Comments
Post a Comment