Skip to main content

மனைவியை கழுத்தறுத்து கொன்று, சடலத்துடன் பெற்றோல் ஊற்றி எரிந்த கணவன்!

 தனது மனைவியின் தலையை துண்டித்து கொலை செய்த கணவர், சடலத்தை வீட்டிற்குள் இழுத்து சென்று பெற்றோல் ஊற்றி எரித்தார். பின்னர் தனக்கும் பெற்றோல் ஊற்றி எரிந்து உயிரிழந்துள்ளார்.

இந்த கொடூர கம்பவளம் கம்பளை, அகுரமுல்ல பகுதியில் நேற்றிரவு நடந்தது.

உயிரிழந்தவர்கள் கம்பளை, வட்டஹேன, அகுரமுல்லவில் வசிக்கும் சார்லஸ் ரணவீர மதநாயக்க (68) மற்றும் சந்தனி சில்வா (57) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.


நீண்ட காலமாக நிலவிய குடும்ப தகராறு காரணமாக இந்த கொலை நடந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

கணவரும் மனைவியும் ஒரே காணியில் இரண்டு வீடுகளில் தனித்தனியாக வசித்து வந்தனர். கணவர் கோழிப்பண்ணை நடத்தி வருகிறார்.

சில காலத்திற்கு முன்பு கம்பளை நீதிமன்றம் உத்தரவிட்டபடி, பராமரிப்பு தொகையாக ரூ.12,000 கணவனால் செலுத்தப்பட்டுள்ளதாக போலீசார் கூறுகின்றனர். இருப்பினும், அந்த தொகை போதாது, தொகையை அதிகரிக்க வேண்டுமென மனைவி பொலிசில் முறையிட்டுள்ளார்.

அவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர், அவர்களில் ஒருவர் வெளிநாட்டில் வசிக்கிறார். மற்ற மகள் திருமணமாகி அவர்களது வீட்டின் அருகே வசித்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

நேற்று (24) தகராறு ஏற்பட்டபோது, ​​அவர்களது மகள்களில் ஒருவரின் மகன் இந்த சம்பவத்தைக் கண்டு பொலிசாருக்கு தகவல் கொடுத்தார்.

மனைவியின் கழுத்தை வெட்டி கொலை செய்த பின்னர், சடலத்தை வீட்டுக்குள் இழுத்து சென்ற கணவன், இருவருக்கும் பெற்றோல் ஊற்றி எரிந்துள்ளார். பொலிசார் சம்பவ இடத்திற்கு சென்ற போது இரண்டு சடலங்களும் கருகிய நிலையில் காணப்பட்டன.

சம்பவ இடத்திற்கு வந்த கம்பளை நீதிவான் ரஞ்சித் பிரேமரத்ன விசாரணையை நடத்தினார், கண்டி சிறப்பு நீதித்துறை மருத்துவ அதிகாரி சிவசுப்ரமணியமும் சம்பவ இடத்திற்கு வந்தார்.

பிரேத பரிசோதனை இன்று (25) கண்டி பொது மருத்துவமனையில் நடத்தப்படும்.

Comments

Popular posts from this blog

எரிபொருள் தாங்கி வெடித்ததில் 91 பேர் உயிரிழப்பு!

  சியரா லியோன் தலைநகர் ப்ரீடவுனில் எரிபொருள் தாங்கியொன்று லொறியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் குறைந்தது 91 பேர் உயிரிழந்துள்ளனர். எரிபொருள் கொள்கலன் தீப்பற்றுவதற்கு முன்னர், அதிலிருந்த எரிபொருள் கசிந்தமையால் பரபரப்பான குறித்த வீதியில் பயணித்த வாகனங்கள் தீப்பற்றியுள்ளன. கொள்கலனிலிருந்து எரிபொருள் கசிந்ததை தொடர்ந்து அதனை சேகரிப்பதற்காக சாரதிகள் முற்பட்ட வேளையில், வாகன நெரிசல் ஏற்பட்டதாகவும் இதன்போதே திடீரென தீப்பற்றியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. விபத்து குறித்த செய்திகளை வெளியிட்டுள்ள உள்ளூர் ஊடகங்கள், விபத்துக்குள்ளான வாகனங்களை சுற்றி சடலங்கள் காணப்படுவதாக சுட்டிக்காட்டியுள்ளன. விபத்து குறித்து தமது கவலையை வெளியிட்டுள்ள ஜனாதிபதி ஜூலியஸ் மடா பயோ, பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கான அனைத்து ஒத்துழைப்புகளையும் வழங்குவதாக உறுதியளித்துள்ளார்.

கொரோனா மரணத்தை தடுக்கும் மாத்திரை கண்டுபிடிப்பு!

  கொரோனா சிகிச்சைக்காக தாங்கள் உருவாக்கியுள்ள மாத்திரை, அந்த நோயால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அபாயத்தையும் உயிரிழப்பு அபாயத்தையும் 90 சதவீதம் வரை குறைக்கும் என்று அமெரிக்காவின் ஃபைஸா் நிறுவனம் தெரிவித்துள்ளது. இது குறித்து, நிறுவனம் வெளியிட்டுள்ள அந்த மருந்தின் ஆய்வு முடிவுகள் தெரிவிப்பதாவது: எங்களின் கொரோனா சிகிச்சை மாத்திரை 775 பெரியவா்களுக்குக் கொடுத்து சோதித்துப் பாா்க்கப்பட்டது. ஆய்வில் பங்கேற்ற அனைவரும், அதற்கு முன்னா் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவா்கள் ஆவா். அந்த ஆய்வின்போது, எங்களின் கொரோனா சிகிச்சை மாத்திரையுடன் மற்றொரு தீநுண்மி எதிா்ப்பு மருந்தும் பங்கேற்பாளா்களுக்கு அளிக்கப்பட்டது. அதில், கொரோனா சிகிச்சை மாத்திரை பெற்றுக் கொண்ட குழுவினருக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டிய அளவுக்கு நோய் தீவிரமடையும் அபாயம் 89 சதவீதம் குறைந்தது தெரிய வந்தது. மேலும், அந்தக் குழுவில் யாரும் ககொரோனாவுக்கு பலியாகவில்லை. சிகிச்சை மாத்திரை அளிக்கப்பட்டவா்களில் 1 சதவீதத்துக்கும் குறைவானவா்களே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். அதே நேரம், எங்களின் கொரோனா மாத்திரையைப் பயன்படுத...

இரண்டு மாதங்களில் கொரோனா வைரஸின் மற்றொரு அலை – மருத்துவ அதிகாரிகள் சங்கம்

  அடுத்த இரண்டு மாதங்களில் மேலும் ஒரு கொரோனா தொற்று அலைக்கு நாடு முகம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும் என அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அரச நிறுவனங்களிலும் சுகாதார நடைமுறைகள் புறக்கணிக்கப்படுவதை அவதானிக்க முடிந்துள்ளதாக அச்சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் வைத்தியர் ருவன் ஜயசூரிய தெரிவித்தார். பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட பின்னர் கொரோனா தொற்று முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட நிலையில் போராட்டங்கள் மற்றும் அதிகளவில் மக்களின் ஒன்றுகூடல்களை அவதானிக்க முடிந்துள்ளது என்றும் குறிப்பிட்டார். இந்நிலைமை காரணமாக எதிர்வரும் காலங்களில் இலங்கையானது கொரோனா வைரஸின் மற்றுமொரு அலையை எதிர்கொள்ளக்கூடும் என்றும் வைத்தியர் ருவன் ஜயசூரிய கூறினார். எவ்வாறாயினும், இலங்கையின் 60% க்கும் அதிகமானவர்கள் தடுப்பூசியை செலுத்திக் கொண்டுள்ளமையினால் வைரஸிலிருந்து பாதுகாப்பாக இருக்க முடியும் என நம்புவதாகவும் அவர் தெரிவித்தார். இருப்பினும் வைரஸின் புதிய மாறுபாடுகள் உருவாகி வருவதாகக் கூறிய வைத்தியர் ருவன் ஜயசூரிய, பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு கேட்டுக்கொண்டார்